திருமாவளவனால் பதற்றமாம்.. குண்டாஸில் கைது செய்ய வேண்டுமாம்.. அலறும் எச். ராஜா
விசிக தலைவர் திருமாவளவனசி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோருகிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
Recommended Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று எச். ராஜா கூறியதாவது:
ஓகி புயல் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே தகவல் அளித்தது. ஆனால் தமிழக அரசுதான் சரியாக கையாளவில்லை.
நிர்மலா சீதாராமன் பார்வை
ஓகி புயல் பாதித்த போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கன்னியாகுமரி வந்து பார்வையிட்டார்.
அநாகரிக போஸ்டர்கள்
கன்னியாகுமரியில் இதுவரை மொத்தம் 2,426 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்களை வைப்பது அநாகரிகமானது.
தேசவிரோதிகள் முகாம்
அணு உலை எதிர்ப்பு இயக்கம், மே 17 இயக்கம் போன்ற தீயசக்திகளை மீனவர்கள் அனுமதிக்க கூடாது. கன்னியாகுமரியில் தேசவிரோதிகள் முகாமிட்டு பாஜகவுக்கு எதிராக மீனவர்களை திசை திருப்புகின்றனர்.
திருமாவை கைது செய்க
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். திருமாவளவன் மதமாற்றத்தைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருமாவளவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். திருமாவளவனை போலீசார் கைது செய்ய தயங்குவது ஏன்?
இவ்வாறு எச். ராஜா கூறினார்.