திருமாவளவனால் பதற்றமாம்.. குண்டாஸில் கைது செய்ய வேண்டுமாம்.. அலறும் எச். ராஜா
விசிக தலைவர் திருமாவளவனசி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோருகிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
Recommended Video

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று எச். ராஜா கூறியதாவது:
ஓகி புயல் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே தகவல் அளித்தது. ஆனால் தமிழக அரசுதான் சரியாக கையாளவில்லை.

நிர்மலா சீதாராமன் பார்வை
ஓகி புயல் பாதித்த போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கன்னியாகுமரி வந்து பார்வையிட்டார்.

அநாகரிக போஸ்டர்கள்
கன்னியாகுமரியில் இதுவரை மொத்தம் 2,426 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் நடத்தும் போராட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்களை வைப்பது அநாகரிகமானது.

தேசவிரோதிகள் முகாம்
அணு உலை எதிர்ப்பு இயக்கம், மே 17 இயக்கம் போன்ற தீயசக்திகளை மீனவர்கள் அனுமதிக்க கூடாது. கன்னியாகுமரியில் தேசவிரோதிகள் முகாமிட்டு பாஜகவுக்கு எதிராக மீனவர்களை திசை திருப்புகின்றனர்.

திருமாவை கைது செய்க
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். திருமாவளவன் மதமாற்றத்தைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருமாவளவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். திருமாவளவனை போலீசார் கைது செய்ய தயங்குவது ஏன்?
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications