போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும்... ரஜினிக்கு எச்.ராஜா பதிலடி
நடிகர் ரஜினி காந்த் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் எச்.ராஜா, போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும் என்று கூறியுள்ளார்.
மதுரை: போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி காந்த் கூறியுள்ளதற்கு, போர் வரும் போது நாங்களூம் பார்த்துக் கொள்வோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. அப்படியே வந்தால் அவர் தனிக் கட்சி தொடங்குவாரா அல்லது தேசிய கட்சியுடன் இணைவாரா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே அவரது ரசிகர்களுடான சந்திப்பு கருதப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம் ஆனால் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வதன் பின்னணி என்ன என்பது தான் புரியவில்லை என்றும் பலரும் புலம்பி வருகின்றனர்.
இந்தநிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், சுதந்திர போராட்டம் நடைபெற்ற போது லண்டனில் "இந்தியா ஹவுஸ்" என்ற கட்டிடம் இருந்தது. அங்கு சென்று சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கி இருந்தனர். ஆனால் அந்த புனிதமான இடத்தில் லலித் மோடி தங்கினார். அடுத்ததாக விஜய் மல்லையா தங்கி இருந்தார். தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ப. சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் குற்றவாளிகள் பட்டியலில் நிரூபிக்கப்பட வேண்டியவர்கள். அதனால் தான் கார்த்தி சிதம்பரம் இப்போதே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். விரைவில் ப.சிதம்பரமும் ஓடி ஒளிவார். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். போர் வரும் போது பாஜகவும் பார்த்து கொள்ளும் என்றார். எந்த அர்த்தத்தில் எச்.ராஜா இவ்வாறு கூறியுள்ளார் என்பது போர் வரும் போது தான் தெரியும் போல் இருக்கிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications