சேலம் வந்தார் கேரள மாணவி ஹாதியா! கணவரை பார்க்க முடியாதாம்.. கல்லூரி தாளாளர் கல்பனா!
மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார்.
Recommended Video

சேலம்: மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதுதொடர்பான வழக்கு உச்சநிதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

விமனம் மூலம் கோவை
மேலும் கல்லூரி டீன் தான் மாணவியின் கார்டியன் என்றும் மாணவியின் முழு பாதுகாப்புக்கும் அவர் தான் பொறுப்பு என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவி ஹாதியா டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்தார்.

சாலை மார்க்கமாக சேலம்
அவருக்கு கோவை விமான நிலையத்தில் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளிக்க கூடின. ஆனால் போலீசார் பாதுகாப்பாக அவரை வாகனத்தில் ஏற்றி சாலை மார்க்கமாக சேலம் அழைத்து வந்தனர்.
ஹோமியோபதி கல்லூரிக்கு வந்துள்ள மாணவி ஹாதியா தனது படிப்பை தொடரவுள்ளார்.

கணவர் சந்திக்க வாய்ப்பில்லை
இதனிடையே சேலம் ஹேமியோபதி கல்லூரியில் தங்கி படிக்கவுள்ள ஹாதியாவை அவரது கணவர் சந்திக்க வாய்ப்பில்லை என கல்லூரி தாளாளர் தெரிவித்துள்ளார். சேலம் ஹோமியோபதி கல்லூரி மகளிர் விடுதி என்பதால் ஹாதியாவின் கணவரை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கல்லூரி தாளாளர் கல்பனா கூறியுள்ளார்.

சேலம் துணை ஆணையர்
இதனிடையே சேலத்தில் தங்கி படிக்கவுள்ள ஹாதியாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என சேலம் துணை ஆணையர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பாதுகாப்பு வழங்கப்படும் என சேலம் துணை ஆணையர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications