கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?.. டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை என தகவல்
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் கீழ் உள்ளார். தொடர்ந்து மருத்துவ குழுவும் அவரை கண்காணித்தபடியே உள்ளனர். இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அளிக்கப்படும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.
இதனால் சோர்ந்து கவலையில் இருந்த தொண்டர்கள் சற்று உற்சாகமாயினர். எனினும் கருணாநிதி பூரண உடல்நலம் பெற்று வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான சிகிச்சையை அவருக்கு அளிக்க உடனடியாக தொடங்கிவிட்டோம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு டாக்டர் தலைமையிலான குழு கருணாநிதி சிகிச்சை தொடர்பானதை பார்த்து வருகிறது. எனினும் கருணாநிதியின் உடல் நிலையில் வேறு எந்த பெரிய அளவிலான மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.