வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடிக்க மேலும் அவகாசம்!
சென்னை: காணாமல் போன வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு மேலும் அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானார். இவரைக் கண்டுபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் கெடு விதித்திருந்தது.

ஆனால் மதனை போலீசார் கண்டுபிடித்துக் கொண்டு வரவில்லை. இந்த நிலையில், மீண்டும் காவல்துறைக்கு மதனைப் பிடிக்க கால அவகாசம் அளித்துள்ளது.
காசியில் கங்கையில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன். இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருந்தது. சமீபத்தில்தான் இவர் உயிருடன் இருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
மதனின் மோசடிகள் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து சமீபத்தில் கைதாகி, விடுதலையானது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications