அண்ணா நூற்றாண்டு நூலகம்... தமிழக அரசுக்கு அக். 31 வரை கெடு விதித்து ஹைகோர்ட் 'வார்னிங்'
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைகளை அக்டோபர் 31-ந் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது. அப்படி செய்யாவிட்டால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க தனியாரிடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணியம் ஒருபொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அண்ணாநூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையராக நியமித்தது. இந்த வழக்கறிஞர்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முறையாக பராமரிக்கவில்லை...
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘இந்த உயர்நீதிமன்றம் பல முறை உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை முறையாக அதிகாரிகள் பராமரிக்கவில்லை என்று கூறினார்.

அக்டோபர் 31-க்குள் சரி செய்வோம்
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, வழக்கறிஞர்கள் குழு சுட்டிக் காட்டியுள்ள அனைத்து குறைகளையும் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சரி செய்யப்படும் என்றார்.

அக். 31 வரை கெடு
தையடுத்து இந்த வழக்கை வருகிற அக்டோபர் 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அதற்குள் நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் சரி செய்யவேண்டும்.

எச்சரிக்கை
அதை அரசு செய்யவில்லை என்றால், நூலகத்தை பராமரிக்க தனியார் அமைப்பு ஒன்றை இந்த நீதிமன்றம் உருவாக்கும். அந்த தனியார் அமைப்பு நூலகத்தை பராமரிக்கும். அதற்கான செலவுகளை தமிழக அரசு வழங்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications