கைதில் இருந்து தப்பினார்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் கொடுத்தது ஹைகோர்ட்!
சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்துள்ளது. இதனால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக அவர் தப்பியுள்ளார்.
சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.

இந்த களேபரத்துக்கு மத்தியில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் பணியாற்றும் வளர்மதி என்ற ஊழியர் இளங்கோவன் மீது அதிரடி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், காமராஜர் அரங்கத்துக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் வாடகையில் இளங்கோவன் மோசடி செய்கிறார். இது பற்றி புகார் கொடுத்தததற்காக கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த 2 விவகாரங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையமும் இளங்கோவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதனால் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய இளங்கோவன், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன், இளங்கோவன் மனு மீது திங்கள்கிழமையன்றுதான் விசாரணை நடைபெறும். அதுவரை கைதுக்கு தடை விதிப்பு போன்ற எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. இதனிடையே இளங்கோவன் திடீரென டெல்லி சென்றார். அவர் வழக்கமாக டெல்லி நகருக்குள்தான் தங்குவார். ஆனால் தமிழக போலீசார் கைது செய்வார்களோ என அஞ்சி அவர் நொய்டா பகுதியில் தங்கி இருந்தார். அவரைத் தேடி தமிழக போலீசார் டெல்லி விரைந்தததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில், இளங்கோவன் நாகர்கோவிலில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி வைத்யநாதன்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications