For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் சர்ச்சையில் நடிகை ”பூனை கண்” புவனேஸ்வரி- இலங்கை பெண் கடத்தல் வழக்கில் ஆஜராக கோர்ட் உத்தரவு

இலங்கை இளம் பெண் கடத்தல் வழக்கில் நேரில் ஆஜராக நடிகை பூனை கண் புவனேஸ்வரிக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் சர்ச்சையில் சிக்கிய புவனேஸ்வரி-வீடியோ

    சென்னை: சர்ச்சைக்குரிய நடிகை பூனை கண் புவனேஸ்வரியை இளம்பெண் கடத்தல் வழக்கில் வரும் 30-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 23-ந் தேதியன்று காணாமல் போனார். ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் அந்த இளம் பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

    HC orders Actress bhuvaneswari to appear

    இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக மாயமான இலங்கை இளம் பெண்ணின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அதில், காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்; மகளுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார்; அவரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அத்துடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நடிகை புவனேஸ்வரிக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகை புவனேஸ்வரி வரும் 30-ந் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,

    கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Madras High Court ordered to Actress bhuvaneswari to appear on Oct 30 in Girl Kidnapping case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X