For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு.. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை ஹைகோர்ட்!

மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மேற்படிப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

HC squashed Single Judge verdicit

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படியே அரசு மருத்துவர்களின் சேர்க்கை இருக்கும் என்று தீர்ப்பு கூறினார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது. அங்கு விசாரணைகள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 50 சதவீத இடஒதுக்கீடு கூடாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

English summary
Madras High court squashed single judge verdict over reservation for medical officers in PG courses case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X