குள்ளநரிகளை வேட்டையாடி தலை, தோல் விற்பனை- வேலூரில் 2 பேர் கைது
வேலூர்: வேலூர் வனப் பகுதியில் முயல், நரி இறைச்சிகளை வேட்டையாடி புதிய பேருந்து நிலையத்தில் விற்பனை செய்ய முயன்ற இருவர் புதன்கிழமையன்று வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதிக்கு தொடர்ச்சியாக தகவல் வந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் முயல் உள்ளிட்ட வன விலங்கு கறிகள் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க வன பாதுகாவலர் கலாநிதி தலைமையில் வனச்சரகர்கள் சுப்பிரமணியன், ராஜா, வன ஊழியர் ஜான் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் வேலூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருவர் முயல் கறி, குள்ள நரித் தோல்களை விற்பனைக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளதாக வனப் பாதுகாவலர் கலாநிதிக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர் அலுவலர்களுடன் நேரடியாக புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் விசாரித்தார்.
செய்யாறை அடுத்த மோரணம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய இவர்களிடம் இருந்து 3 குள்ள நரிகளின் தோல்கள், தலை, 8 முயல்களின் இறைச்சி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வனப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வேட்டையாடியது தெரியவந்ததை அடுத்து வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளநரிகளின் தோல் நல்ல விலை போவதாகவும், மருந்துக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குள்ளநரிகள் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளில் ஒன்றாக உள்ளது. இவை அழிக்கப்பட்டு வருவதால் வனப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுபற்றி மாவட்ட வன பாதுகாவலர், "குள்ள நரிகள் எண்ணிக்கை குறைவதால் காட்டுப்பன்றிகள், மான்களின் எண்ணிக்கை அதிகரித்து சம நிலை இல்லாத நிலை ஏற்படுகிறது. குள்ளநரிகள் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தால் அவை காட்டுப் பன்றிகள், மான்களை வேட்டையாடிவிடும். அப்போது வன விலங்குகளின் சம நிலையை உருவாக்கும்.
எனவே வன விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடாமல் இருப்பது நல்லது. அப்படி வேட்டையாடுவது குற்றச்செயல் ஆகும். வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிக்கும் நடவடிக்கை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications