"ஃபுல்" போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரியில் குடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக முகமது சலீம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வேலை நேரங்களில் குடிபோதையில் வருவதால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மத்தியில் பல பிரச்சனைகள் ஏற்ப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று காலை முகமது சலீம் போதையில் பள்ளிக்கு வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த பெற்றோர், பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று பகல் 3:00 மணியளவில் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, பள்ளிக்கு வந்த போது, முகமது சலீம் திடீரென அரை நாள் விடுப்பில் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, முகமது சலீம் வீட்டிற்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் அவரை அழைத்து வந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தினார்.

அப்போது, அவர் போதையில் இருந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து, தலைமையாசிரியர் முகமது சலீம் மீது தேவாலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் உதவியுடன் முகமது சலீம் பந்தலுார் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முகமது சலீம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+