ஜெ. பற்றி அவதூறு பேச்சு: விஜயகாந்த், சந்திரகுமார் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
நாகர்கோவில்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் கொறடா சந்திரகுமார் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகக் கூறி வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதை ஜூன் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதை நீதிபதி ராஜசேகரன் செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
7.4.2013 அன்று குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுமணியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தேமுதிக கொறடாவும், எம்.எம்.ஏ.வுமான சந்திரகுமார் மீதான வழக்கும் இன்று நீதிபதி ராஜசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விஜயகாந்த் மீதான வழக்கை போன்றே இந்த வழக்கின் விசாரணையையும் நீதிபதி ஒத்தி வைத்தார். இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications