தொடர் விடுமுறை எதிரொலி... குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
குற்றாலம்: தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அருவிகளின் நகரமாக விளங்குவது நெல்லைமாவட்டம் குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும்.
எனவே, இங்கு குளிப்பதற்கு சுமார் 80இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அருவிகளில் வெள்ளம்...
இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சீசன் முறையே தொடங்கியதால் அருவிகளில் குளிப்பதற்க்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியது.தொடர்ந்து கடந்த 70நாட்களில் குற்றாலம், ஐந்தருவிகளில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று பெய்ததின் காரணமாக சுமார் 5முறை அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டது.

தொடர் விடுமுறை...
ஆனால், கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 13, 14 மற்றும் 15 ஆகிய 3தினங்கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்தது.

சுற்றுலாப் பயணிகள் கூட்டம்...
எனவே, குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்தவண்ணம் உள்ளனர். குற்றாலம் மெயின் அருவியில் குறைந்தளவே விழும் நீரில் பெண்கள் வரிசையில் நின்று குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.

பாதுகாப்பு இல்லை...
ஆண்கள் பகுதியில் அதிக தண்ணீர் கொட்டுவதால் அவர்கள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். ஐந்தருவியிலும் இதே நிலைதான் உள்ளது.போதிய போலீசார் பாதுகாப்பு இல்லாததால் அருவிக்கரையில் அலைமோதி வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்தமுடியவில்லை.

செயின் பறிப்பு...
இந்நிலையில் காலை குற்றாலம் மெயின் அறிவிப் பகுதியில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மூதாட்டி மோஸியா என்பவரிடம் திருவாரூரை சார்ந்த கணவன், மனைவி தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது பிடிபபட்டனர்.












Click it and Unblock the Notifications