திடீரென நிலை குலைந்த போலீஸ்.. கருணாநிதி உடல் அருகே குவிந்த தொண்டர்கள்.. ராஜாஜி ஹாலில் பரபரப்பு
போலீஸ் கட்டுப்பாட்டை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு தொண்டர்கள் சென்றனர்.
Recommended Video

சென்னை: போலீஸ் கட்டுப்பாட்டை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு தொண்டர்கள் கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதியின் உடல் நேற்று காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு கோபாலபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சிஐடி காலனிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் இன்று அதிகாலை 6 மணிக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடல் வருவதற்கு முன்பே ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது.
வெளியூர்களில் இருந்தும் தொண்டர்கள் குவிந்ததால் போதுமான போலீஸார் இல்லாததால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீஸார் திணறினர்.
இதையடுத்து தொண்டர்கள் கூட்டமாக கருணாநிதி வைக்கப்பட்ட உடல் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். எனினும் கருணாநிதி அருகே மக்கள் அஞ்சலி செலுத்த திமுக அனுமதித்துள்ளது.












Click it and Unblock the Notifications