புரட்டாசி முதல் சனிக்கிழமை... பக்தர்கள் வெள்ளத்தால் திணறிய திருச்செந்தூர்
தூத்துக்குடி: புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று மாலை அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூரில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருப்பதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான மாலை சிறப்பு அள்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாலை 6 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வண்ணம் இருந்தது. திரளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி, சாத்தான்குளம் வழியாகவும் சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டது. திருச்செந்தூர் செல்லும் வழியில் அதிக அளவில் நவதிருப்பதி கோயில்கள் இருப்பதால் பக்தர்கள் அனைவரும் அனைத்து நவ திருப்பதி கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினர். சிலர் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை கார்களில் வந்திருந்தனர்.
புரட்டாசி சனிக்கிழமைக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் மற்றும் அவரது மகன்கள் சிவகுமார், சரவணன், உதவி பொது மேலாளர் ஆறுமுகம், மூத்த அலுவலர்கள் சீனு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications