For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி, பெங்களூரில் 2 மணி நேரமாக வெளுக்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம்
கிருஷ்ணகிரி முதல் பெங்களூரு வரை கடந்த 2 மணி நேரமாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஓசூர்: கிருஷ்ணகிரி முதல் பெங்களூரு வரை கடந்த 2 மணி நேரமாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பகல் நேரங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்தாலும் தமிழகத்தின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
இதனால் வெயில் ஓரளவுக்கு தணிந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு வரை கடந்த 2மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இருப்பினும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக பெய்த கனமழையால் வானிலை சில்லென மாறியதால் மக்கள் இந்த மழையை கொண்டாடி வருகின்றனர்.
Comments
English summary
Heavy rain in Bengaluru and kirshnagiri for last two hours. People enjoying the rain.
Story first published: Friday, May 25, 2018, 21:08 [IST]