விடாது கொட்டும் மழை - 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4வது நாளாக விடுமுறை
வடகிழக்குப் பருவமழை நீடிப்பதால் 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட கடலோர மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் 19 செமீ, நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மழை பெய்துள்ளது.
விடிய விடிய கொட்டிய மழையால் சென்னை மாநகரமே மிதக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications