தமிழகத்தில் பெய்த தொடர் கனமழைக்கு இதுவரை 204 பேர் பலி: காவல்துறை தகவல்
சென்னை: தமிழகத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, இது வரை 204 பேர் இறந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த மழைக்கு சென்னை பெருநகரமே வெள்ளத்தால் மிதக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஏரிகள் நிரம்ப அதன் உபரி நீர் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் திறந்துவிட சென்னையில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த மழையின் காரணமாகவும், வெள்ளத்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் புதன்கிழமை வரை 204 பேர் மழைக்கு இறந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 55 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரும் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications