நெல்லையில் கனமழை... திருங்குறுங்குடியில் காட்டாற்று வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மழை தீவிரமடைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென் மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழகம் மற்றும் கேரளத்துக்கு பயனை தரக் கூடிய தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் தென் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

Heavy rain hits in Nellai District: Normalcy affects

கடந்த இரு நாட்களாக நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மழை காரணமாக களக்காடு, திருக்குறுங்குடி ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பிக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நம்பிஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினரால் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ள நீர் குறைந்ததால் இயல்பு நிலை திரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+