தேன் மாரியாக பெய்யும் தென் மேற்குப் பருவ மழை... ஆண்டிப்பட்டியில் செம மழை
தேனி: கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து அதையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெரு மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கன மழையால் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குளிர்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி ஆகிய எல்லைப்புற மாவட்டங்களிலும் பரவலாக கன மழை கொட்டி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல நீலகிரி மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பரவலாக மழை கொட்டி வருகிறது. இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், அரசரடி, மேகமலை, வைகை அணை, வெள்ளிமலை ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
இந்தத் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications