கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதிகளில் கன மழை
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: ஒசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இன்று மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகம், கேரளத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. ஆனால் தமிழகத்தில் மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இந்நிலையில், இன்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின், கிருஷ்ணகிரி, ஒசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களும், விவசாயிகளும் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications