செஞ்சி.. செங்கம்.. திருப்பத்தூர்.. அடித்து தூள் கிளப்பும் கனமழை.. சிலு சிலு காற்றால் மக்கள் குஷி
செங்கம், திருப்பத்தூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. என்றாலும் வெப்பச் சலனம் காரணமாக சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இன்று, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

காற்றுடன் கனமழை
அக்னி நட்சத்திரம் வாட்டி எடுத்து வரும் வேளையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு
மழையின் போது பலத்தக் காற்று வீசியதால், மின்சார ஓயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்துள்ளன. இதனால் இந்தப் பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்னல் இடி
அதே போன்று, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் பூமி குளிர்ந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை
திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. கே.கே. சத்திரம், ராமஞ்சேரி, புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications