நீலகிரி மாவட்டத்தில் மழை... மரங்கள் சாலைகளின் குறுக்கே சாய்ந்தன... போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருவதால் மரங்கள் சாலைகளின் குறுக்கே சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னல் கனமழையுடன் காற்று பலமாக வீசியதால் சாலையின் குறுக்கே மரங்கள் சாய்ந்துள்ளன.
குன்னூர் அருகே காந்திபுரம் பகுதியில் கேரளா கண்ணூரில் இருந்து காரில் கொண்டிருந்த சுற்றுலாபயணிகளின் கார் மீது பெரிய மரம் ஒன்று விழுந்தில் காரில் பயணம் செய்த ஷாகிர் என்பவர் படுகாயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் வந்த மாயன் மற்றும் ஓட்டுநர் குருவாயூரப்பன் காயமின்றி தப்பினார். இந்த வாகனத்தின் பின்னால் வந்த காரில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் அவருடன் வந்த பெண் பாரதிக்கு காயம் ஏற்பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பின்னால் வந்த அரசு பேருந்து அதிஷ்டவசமாக தப்பியதால் பயணிகளுக்கு எந்த காயங்களுக்கு ஏற்பட வில்லை அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் 5 கி.மீ. தூரம் வரைக்கும் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றது. இன்று அதிகாலை உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக 10 இடங்களில் மரம் விழுந்தன.
குன்னூர் காந்திபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் விழுந்ததில் பெண் உட்பட இருவர் படுகாயம் குன்னூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications