தென்காசி பகுதியில் குளு குளு ஐஸ் கட்டி மழை.. பொது மக்கள் மகிழ்ச்சி
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி: கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து பொதுமக்களை குளிர்வித்தது. மேலும் ஆலங்குளம் பகுதிகளில் ஐஸ்கட்டி மழை பெய்தது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவும் நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் வெயில் சுட்டெரித்து வருகிறது.

கரூர், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அனல் காற்றை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பலத்த மழை பெய்தது. 63 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியது. இதனிடையே இன்று பகலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, குண்டாறு, ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலொடு கன மழை பெய்து வருகிறது.
இம்மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தை தாங்க முடியமால் தவித்து வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. மேலும் ஆலங்குளம் பகுதிகளில் ஐஸ் கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications