For Daily Alerts
Just In
தொடர் மழை... சிவகங்கை, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சிவகங்கை: தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிவகங்கை மாவட்டம் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று சற்று ஓய்ந்திருந்த மழை இன்று மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
எனவே, தொடர் மழை காரணமாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல், காரைக்கால் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
Comments
English summary
Schools have been declared holiday in Karaikal, Sivagangai because of heavy rain.