கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, வியாழக்கிழமை வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வியாழக்கிழமை கூறியதாவது: வங்கக் கடல் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது. தற்போது, இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

Heavy rain in the cuddalore, delta districts

பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். வட கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் பலத்த, மிக பலத்த மழை இருக்கும்.

மிக பலத்த மழை எச்சரிக்கை: கணினி சார்ந்த கணிப்புகள்படி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புண்டு. தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும். அதாவது, அந்தப் பகுதிகளில் 250 மி.மீட்டர் அளவுக்கும் மேல் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் விட்டு விட்டு மழை இருக்கும். நகரில் ஓரிரு முறை பலத்த மழை பெய்யவும் வாய்ப்புண்டு.

தென்தமிழகம், புதுச்சேரி, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு ஆகிய திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், வங்கக் கடலில் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

3 நாள்களுக்கு பலத்த மழை: இந்த நிகழ்வின் காரணமாக, அடுத்து வரும் 3 நாள்களுக்கு நல்ல மழை இருக்கும்.

கடலோர மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை இருக்கும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+