தேனி மாவட்டத்தில் பரவலாக மழை-விவசாயிகள் மகிழ்ச்சி
கம்பம்: தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தேனி அருகே கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனது. இதனால் இந்த அணையை நம்பி இருந்த பகுதிகளின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
விளை நிலங்கள் எல்லாம் தரிசாக மாறி உள்ள இந்த விளை நிலங்களை தற்போது மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார்கள்.
மேலும், தொடர்ந்து பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் தவம் கிடந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்றும் நல்ல மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதேபோல தேனி, போடி, சின்னமனூர், பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications