For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்... வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா மற்றும் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்

    சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிரட்டி வரும் நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் இருந்து வருகிறது.

    Heavy rain warning for five districts of Tamilnadu

    இதனால் நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழையால் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

    மேலும் தென் கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக தேவாலாவில் 11 சென்டிமீட்டர், சின்னகல்லாரில் 10 சென்டிமீட்டர் மற்றும வால்பாறையில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    English summary
    Chennai Meteorological center warns heavy rain in five districts of Tamilnadu. See will be rough says chennai meteorological center.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X