கோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை.. ஜில் ஜில் க்ளைமேட்டால் மக்கள் ஹேப்பி!
கோவையில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கோவை: பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவையில் மாலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிற்பகலில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications