பொங்கல் விடுமுறை : வண்டலூர் பூங்காவில் குவியும் பார்வையாளர்கள் - சிறப்பு ஏற்பாடுகள்
பொங்கல் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறையையொட்டி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையை அடுத்த வண்ட லூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்கு ஆசியா விலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில்,1,500-க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாலூட்டி வகைகளில் 38 இனங்களும், பறவைகளில் 20 இனங்களும், ஊர்வனங்களில் 14 இனங்களும் வளர்க்கப்படுகின்றன.
சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு தலம் இந்த பூங்கா. விடுமுறை தினங்களில் இங்கு பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

வண்டலூர் பூங்காவில்
பொங்கல் திருவிழாவையொட்டி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூட்டம் அலைமோதுகிறது. காணும் பொங்கல் தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் இன்று அதிக அளவில் பூங்காவில் குவிந்து உள்ளார்கள்.

வர்தாவில் பாதிப்பு
வார்தா புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த பல ஆயிரம் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பசுமை நிறைந்து காணப்பட்ட பூங்கா, இன்று வறண்ட பூமியாக மாறியது. இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வர்தாவில் பாதிக்கப்பட்ட வண்டலூர் பூங்கா சீரமைக்கப்பட்டு இந்த ஆண்டு திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூங்கா திறப்பு
காணும் பொங்கலையொட்டி வழக்கமாக செவ்வாய்கிழமை பூங்காவிற்கு அளிக்கப்படும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளை மட்டும் காலை 8 மணிக்கே பூங்கா திறக்கப்படும்.

வண்டலூர் பூங்கா
கூட்ட நெரிசலை சமாளிக்க 30 டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நெரிசலில் சிக்காமல் இருக்க நுழைவுச் சீட்டுகள் மற்றும் பூங்காவின் இதர வசதிகளை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications