சிறுபான்மையினருக்கு சீட் மறுப்பு- காங்.-ல் இருந்து மூத்த தலைவர் இதயத்துல்லா விலகல்
சென்னை: சட்டசபை தேர்தலில் சிறுபான்மையினர் போட்டியிட உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இதயத்துல்லா தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 41 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் அம்பத்தூர் தொகுதியில் ஹாஸன் மௌலானாவும் குளச்சல் தொகுதியில் ஜெ.ஜி.பிரின்ஸும் சிறுபான்மை சமூகத்தவர்களாக இடம்பெற்றிருந்தனர்.

இருப்பினும் வேட்பாளர்களில் சிறுபான்மையினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி மூத்த தலைவர் இதயத்துல்லா போர்க்கொடி தூக்கியுள்ளார். அத்துடன் தாம் காங்கிரஸில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தலித்துகளுக்கான தனித்தொகுதிகளை திமுகவிடம் இருந்து காங்கிரஸ் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை சமூகத்தினரும் அதிருப்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications