எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
2 எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய ஆட்கொணர்வு மனுக்களை சென்னை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: எம்எல்ஏக்கள் கிருஷ்ணாராயபுரம் கீதா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரை மீட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சென்னை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை சசி குரூப் அடைத்து வைத்துள்ளது. இதையடுத்து தங்கள் தொகுதி எம்எல்ஏக்கள் காணவில்லை என காவல்நிலையங்களில் அந்தந்த தொகுதி மக்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மதிவாணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ரிசார்ட்டில் தங்கியுள்ளதாக அளித்த வாக்குமூல கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications