செங்கத்தில் அப்பா, மகனை கொடூரமாக தாக்கிய போலீஸ்..பொதுநல வழக்காக ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: செங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை காவலர்கள் தாக்கியது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தலைமை காவலர்கள் 3 பேர் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள் வாட்ஸ் அப்பிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான செய்தியை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முறையீடு செய்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி அமர்வு, பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் பொதுநலன் என்ற பெயரில் முறையீடு செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். மேலும் இந்த வழக்கை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நேரடியாக தொடரலாம் எனவும் கூறினார்.
அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், முறையீடு என்ற பெயரில் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுகிறது. பட்டியல் இடப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை கூறினார். அதற்கு பதில் அளித்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சமூகத்தில் சட்ட விரோத சம்பவங்கள் நடைபெறும்போது அதனை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டுவருவது தங்கள் கடமை என்றும், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications