பள்ளி ஆசிரியைகள் இனி “ஓவர் கோட்” அணிதல் கட்டாயம்- மதுரை பள்ளியில் தொடக்கம்!
மதுரை: தமிழக பள்ளிகளில் மாணவர்களின் கேலி கிண்டல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு யூனிபார்ம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பருவ வயதை எட்டும் மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும் 18 வயது பூர்த்தி அடையாத பிளஸ் 2 மாணவர்கள் ஆசிரியைகளை கேலி கிண்டல் செய்யும் சம்பவங்களாலும் கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதையடுத்து ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து ஏப்ரலில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அரசு அனுமதிக்கு வெயிட்டிங்:
இதில் பல பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆசிரியைகளை மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகள் கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பெற்றோரிடம் அறிவுருத்தல்:
இதுகுறித்து மதுரை மாவட்ட போலீசார் விசாரித்து மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுறுத்தினர். மேலும் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வர அறிவுறுத்தினர்.
கோட் போடனும் இனி:
இதன்படி சில மாணவர்களின் தவறான செய்கை மற்றும் பார்வைகளில் இருந்து தப்பிக்க ஆசிரியைகளுக்கு மட்டும் சேலையுடன் "மேல் கோட்" என்ற மேலங்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
திட்டம் அறிமுகம்:
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயசாமி உத்தரவுப்படி மதுரை பேரையூர் தாலுகா வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
பள்ளிக்குள் கோட் கட்டாயம்:
"பள்ளிக்குள் இனி கண்டிப்பாக மேல்கோட் அணிய வேண்டும்" என ஆசிரியைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். "மற்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒப்புதல் பெற்றபின் இந்த உடை கட்டுப்பாட்டை அமல்படுத்தலாம்" எனக் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே பெண் பேராசிரியைகளுக்கு கோட் அணிதல் கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications