மாணவர் அமைப்பு தடையை ஆதரித்து ஐஐடி அருகே இந்து மக்கள் கட்சி போராடியதால் பரபரப்பு!
சென்னை: மெட்ராஸ் ஐஐடி மாணவர்களின் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஐஐடி வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தடைக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாரின் சிந்தனைகளை ஐஐடிக்குள் பரப்பக் கூடாது என்று முழக்கமிட்டனர். அதேநேரம் சென்னை ஐஐடிக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.
அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதித்ததற்கு எதிராக ஒரு பக்கம் போராட்டம் நடைபெற்றபோது மறுபக்கம், ஆதரவு போராட்டம் நடந்ததால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாக இருந்தது. ஆனால், போலீசார் உடனடியாக இந்து மக்கள் கட்சி தொண்டர்களை கைது செய்து அழைத்துச் சென்றதால் மோதல் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications