திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி விலை.. இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் அதிரடி கைது
திருமாவளவனின் தலையை துண்டித்தால் ரூ.1 கோடி தருவதாக கூறிய இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

திருப்பூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவனின் தலையை துண்டிப்போருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதியை தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் அக்கட்சி நடத்தியது.

அந்த மாநாட்டு கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சங் பரிவார் போன்ற அமைப்புகள் கூறி வருகின்றன.
பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோயில்களையும் இடித்து இந்து கோயில்கள் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக, இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத் , திருமாவளவன் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கோபிநாத்தை கைது செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கோபிநாத் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications