For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல் ஐ.லியோனி குறித்த வதந்தி... நம்பாதீர்கள் என உறவினர்கள் கோரிக்கை

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளார் லியோனி நலமாக உள்ளார் என்றும் அவர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Hoax about dindigul leoni

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்து வதந்தி ஒன்று இணையங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரி என்ற நபர் முகநூலில், லியோனி மரணம் அடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். இது லியோனி ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

உண்மையில், திண்டுக்கல் சவுரியார்பாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்றிரவு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாமகவினர் இவ்வாறு வதந்தி பரப்பினர் என்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அவரைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Dindigul I.leoni was fine, don't trust the news about his health, Relatives says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X