கனமழை: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெள்ளத்தில் தத்தளிக்கும் ராமேஸ்வரம்
கடலூர்: கன மழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவு, மண்டபத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், குடிசை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாம்பன் பாலத்தில் சிக்னல் கிடைக்காததால், ரயில்கள் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. வியாழக்கிழமையன்று நள்ளிரவில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது.

சூழ்ந்த வெள்ளநீர்
ராமேஸ்வரம், பாம்பனில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. தொடர் மழையால் மீனவர்களின் குடிசை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, வீடுகளை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

மீனவர்கள் விடுமுறை
சூறாவளி காற்றால் அச்சமடைந்த ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு, பாம்பன் தெற்கு விசைப்படகு மீனவர்கள் பலர் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடிப்பதால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.

ரயில்கள் தாமதம்
வெள்ளிக்கிழமையன்று அதிகாலை பாம்பனில் 76 கி.மீ, வேகத்தில் வீசிய சூறாவளியால், தூக்கு பாலத்தில் ரயில் செல்ல தானியங்கி மிஷின் அனிமோ மீட்டரில் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 5:40 மணிக்கு மதுரை சென்ற பாசஞ்சர் ரயில் அக்காள்மடத்திலும், சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து புறப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் மற்றும் 2 பாசஞ்சர் ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன. இதனால் வட இந்திய பக்தர்கள், உள்ளூர் பயணிகள் பாதிக்கப்பட்டு, பஸ்சில் ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு சென்றனர்.

கடலூரில் விடுமுறை
இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பாண்டூர், அரளி, காட்டுநெமிலி, செங்குறிச்சியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடல் சீற்றம்
மேலும் வேதாரண்யத்தில் 2வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நகரும் காற்றழுத்தம்
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. அது, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நீடிக்கும்
இதனால் தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் கடலில் சீற்றம் காணப்படும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications