19ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... 3 தொகுதிகளுக்கும் பொது விடுமுறை அறிவிப்பு
வரும் 19ம் தேதி 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சியான திமுகவும் அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தன.

கடந்த 17ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் 3 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்து இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படைகள் தொகுதியின் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து ஆவணங்களின்றி எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று, இந்த 3 தொகுதிகளுக்கும் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 19ம் தேதி இந்த 3 தொகுதிகளிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும், இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய தேர்தல் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ரத்து செய்யப்பட்டது. நிறுத்தப்பட்ட தேர்தலை வரும் 19ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை அங்கு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேலு மரணமடைந்ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications