தொடர் மழை.. கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொடர்ந்து மழை பெய்துவருவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மாலை முதலே மழை கொட்டி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அண்டை நகரமான பெங்களூரிலும் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் மக்கள் குளிரில் அவதிப்பட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications