For Daily Alerts
Just In
கனமழை நீடிப்பு: திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை நீடிப்பதால் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: மழை தொடர்ந்து நீடிப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. கடலோர மாவட்டங்களை மட்டுமல்ல தென் தமிழகத்திலும் மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் நிர்மலராஜ் அறிவித்துள்ளார்.
தஞ்சையில் விடுமுறை
இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்திலும் மழை தொடருவதால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The Schools in Thiruvarur district will remain closed on Wednesday in the wake of heavy downpour according to a communication from Collector Niramalaraj.