மீண்டும் ஒரு கள்ளக்காதல்.. மறுபடியும் ஒரு கூலிப்படை.. கணவரை ஆள் வைத்துக் கொன்ற மனைவி
சென்னை: ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு காரணமாக கணவனைக் கூலிப்படை வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை டி.பி.சத்திரம் வ.ஊ.சி. நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர் கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்கிறார். இவரது மனைவி பெயர் நிர்மலா (40). ஏழுமலை பணவசதி படைத்தவர். நிர்மலா பி.ஏ. படித்திருந்தும் வேலைக்கு போகவில்லை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் 17-ந் தேதியன்று ஏழுமலை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்திலும், நெற்றியிலும் காயங்கள் இருந்தன. அவர் வெளியில் சென்றுவிட்டு வந்ததாகவும், அப்போது விபத்தில் சிக்கி அடிபட்டிருக்கலாம் என்றும், உடலில் பட்ட காயத்தோடு அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார் என்றும், தூக்கத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனதாகவும் டி.பி.சத்திரம் போலீசில் நிர்மலா புகார் கொடுத்தார்.
ஏழுமலையின் சடலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன. இன்ஸ்பெக்டர் ராயப்பன் மர்ம மரணம் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஏழுமலையின் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராயப்பன் உடனடியாக அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து ரகசியமாக விசாரணை நடத்தினார்.
அப்போது, ஏழுமலையின் மனைவி நிர்மலாவே அவரது கள்ளக்காதலன் செல்வம் (45) என்பவருடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. செல்வம் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவர் திங்கட்கிழமையன்று பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று நிர்மலாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் ஏழுமலை கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். போலீசில் அவர் கூறியதாவது:
நானும், ஆட்டோ டிரைவர் செல்வமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எனது வீட்டுக்கு எதிரில்தான் ஆட்டோவை செல்வம் நிறுத்தி இருப்பார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம்.
எங்கள் தொடர்பு எனது கணவருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். அவருக்கு நிறைய சொத்துகள் உள்ளன. செல்வத்துடனான தொடர்பை விடாவிட்டால் சொத்துகள் அனைத்தையும் தனது அண்ணன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்துவிடுவேன் என்று எனது கணவர் மிரட்டினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.
எங்களது திட்டப்படி அக்டோபர் 17 ஆம் தேதியன்று பகல் 12.30 மணியளவில் எனது கணவர் ஏழுமலை வீட்டுக்கு சாப்பிட வந்தபோது செல்வமும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக்கொன்றனர். பின்னர் அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக நாடகமாடினேன்.
அவரது இறுதி சடங்குகளை முடித்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் இருந்தேன். ஆனால் உண்மையை போலீசார் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டனர் என்று நிர்மலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
நிர்மலா நேற்றிரவு நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். கொலை செய்ய உதவிய ஆட்டோ டிரைவர் செல்வத்தின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கியதற்காக இன்ஸ்பெக்டர் ராயப்பனை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
சமீபத்தில்தான் ஆலப்பாக்கம் பகுதியில் ஒருவரை மனைவியே கூலிப்படை வைத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இந்த நிலையில் அதே போல இன்னொரு கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications