வீட்டுவசதி சங்க முன்னாள் அதிகாரி நெல்லை அருகே வெட்டி கொலை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை அருகே கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது அங்கு பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை முத்துமாலையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவர் தற்போது விகேபுரத்தை அருகே வசித்து வந்தார்.

Housing board former employee hacked to death

இந்நிலையில், நேற்று மாலை சங்கரன்கோவிலில் இருந்து கோடரான்குளம் செல்லும் சாலையின் ஓரத்தில் வெட்டு காயத்துடன் ஜெயமணி பிணமாக கிடந்ததை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

அம்பை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது சட்டை பையில் கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதிவு தபால் அனுப்பிய ரசீதுகள் இருந்தன. அதில் ஐந்தாம் கட்டளை முத்துமலையாபுரம் என்று இருந்தது.

ஜெயமணி, தூத்துக்குடி மேலூர் வீட்டு வசதி வாரிய சங்கத்தில் செயலளராக பணிபுரிந்து 3 ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும், பலரிடம் வேலை வாங்கி தருவதாக அவர் பணம் வாஙகியதும் விசாரணையில் தெரிய வந்தது.

வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரை கொலை செய்தார்களா, அல்லது நிலப்பிரச்சனையால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது அங்கு பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+