"வீடு தேடி வரும் ஆவின் பால்.." வருகிறது புது மாஸ் திட்டம்.. அது என்ன இ-பால் கார்டு! யாருக்கு நன்மை
சென்னை: ஆவின் கார்டுகாரர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், பால் விநியோகத்தைச் சீரமைக்கவும் ஆவின் நிறுவனம் இ-பால் கார்டை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் ஆவின் பால் விலை குறைவாகவே உள்ளது. இதனால் மக்கள் ஆவின் பாலை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆவின் பால் தமிழ்நாடு முழுக்க உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பால் அட்டைகள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது பால் அட்டை மூலம் தினசரி 6 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.
சந்தையில் ஆவின் ஃபுல் கிரீம் பால் ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கார்டு வைத்திருப்பவர்களுக்கு அது மானிய விலையில் ரூ.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தரப்படுத்தப்பட்ட பால் (பச்சை பாக்டெக்) சில்லறை விற்பனையில் 44 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அது லிட்டருக்கு ரூ.41க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டோன்டு பாலுக்கும் லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தே விற்பனை செய்யப்படுகிறது.
இ-பால் கார்டு: இப்போது பேப்பர் அட்டைகள் மூலமே இந்த கார்ட் போடப்படுகிறது. இதில் மானியங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதால் பால் விநியோகம் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாசர் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆவின் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த முறைக்கு மாற்றப்படுவார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ் பாலை வீட்டிற்கே கொண்டு சென்று டூர் டெலவரி செய்யும் திட்டமும் உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது. முழு கிரீம் பால் (ஆரஞ்சு பாக்கெட்) சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.48இல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தியது. ஆனால், கார்டு வைத்திருப்பவர்களுக்கு 48 ரூபாய்க்கே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் போலியாக கார்டு மூலம் வாங்கி கடைகளுக்கு விற்பதாகப் புகார் அழுந்தது. இதுபோல மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஆரஞ்சு கார்டுகளை புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனவரி மாதம் ஆவின் நிறுவனம் உத்தரவிட்டது.
போலி கார்டுகள் ஒழிக்கப்படும்: இதன் மூலம் ஆயிரக்கணக்கான போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இ-கார்டு கொண்டு வரப்பட்டால், ஒவ்வொரு பால் அட்டை நுகர்வோருக்கும் எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது முற்றிலுமாக ஒழிக்க முடியும்" என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், சென்னையின் தென் மண்டலத்தைச் சேர்ந்த ஆவின் ஊழியர்கள் மானியத்துடன் கூடிய முழு கிரீம் பாலை வணிக நிறுவனங்களுக்கு விற்பதாகப் புகார் எழுந்தது. இது குறித்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் தவறு நடப்பது உறுதியான நிலையில், மார்க்கெட்டிங் துறையில் உதவி பொது மேலாளர் பதவியில் இருக்கும்4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இ-பால் கார்டு முறை கொண்டு வரப்பட்டால், முறைகேடுகளைப் பெறுமளவு ஒழிக்க முடியும்.

மற்ற முக்கிய அறிவிப்புகள்: பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 200,000 கறவை மாடுகளை வாங்க நபார்டு வங்கியின் துணை நிறுவனமான NABSanrakshan மூலம் ஆவின் பால் பண்ணையாளர்களுக்குக் கடன் வழங்கப்படும். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூ.25 கோடியில் மாட்டுத் தீவன உற்பத்தி ஆலை ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு நபார்டு வங்கியின் கீழ் உள்ள கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் நிதியளிக்கப்படும்.
எருமைப் பால் உற்பத்தியை மேம்படுத்த எருமைக் கன்றுகளை வளர்க்கும் திட்டம் தொடங்கப்படும். அனைத்து பால்பண்ணைகளிலும் பால் பேக்கேஜிங் தானியங்கி முறையில் அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கப்படும் இப்போது அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பால்பண்ணைகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நல நிதி கணினிமயமாக்கப்படும். தரமான பாலை தரும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். கறவை மாடுகளுக்கு மத்திய அரசின் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யப் பால் உற்பத்தியாளர்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்கத் தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications