டிடிவி தினகரன் எப்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக முடியும்? அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
டிடிவி தினகரன் எப்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் எப்படி அதிமுக துணைப் பொதுச்செயலாளராக முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் கடந்த வாரம் டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர். இதனார் எடப்பாடி பழனிச்சாமிக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கும் இடையேயான மோதல் முற்றியது.
தனது நியமனத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 420, போர்ஜரி என்றெல்லாம் விமர்சித்தார். அமைச்சர்களையும் பணத்தை சுருட்டிக்கொள்வதற்கான தனக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாட்டினார்.

தினகரன் பேச்சுக்கு எதிர்ப்பு
தினகரனின் இந்தப் பேச்சு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை கொந்தளிக்க செய்தது. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அழகு பார்க்க விரும்பவில்லை
அப்போது ஜெயலலிதா இருந்த பதவியில் யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்ப வில்லை எனக்கூறினார். தற்போது நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தினகரன் குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

நிதானம் தவறுகிறார்
மேலும் அமைச்சர்கள் சுருட்டிக்கொள்ள நினைக்கின்றனர் என டிடிவி தினகரன் கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். டிடிவி தினகரன் நிதானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

டிடிவி தினகரன் எப்படி?
2011ல் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி துணைப் பொதுச்செயலாளராக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெருந்தன்மையோடு இருக்கிறோம்
முதல்வரை 420 என்று கூறியப் பிறகும் தாங்கள் தான் பெருந்தன்மையோடு இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன் என்று கூறிய ஸ்டாலினை தினகரன் எதிர்த்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications