வயிற்றுப் பிழைப்புக்காக ரிஸ்க் எடுத்து ஆந்திராவில் பலியான 20 தமிழர்கள்!
சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் பண ஆசை காட்டி தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை செம்மரங்களை வெட்ட வைக்கின்றனர். வயிற்றுப் பிழைப்புக்காக செம்மரம் வெட்டிய தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திரா போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மலைப் பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கேட்டதற்கு தற்காப்புக்காக சுட்டதாக பொறுப்பின்றி பதில் அளித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் ஆந்திர மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழர்கள்
செம்மரம் கடத்தியதாகக் கூறி சுமார் 2 ஆயிரத்து 300 தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நாளைக்கு மூன்று வேளையும் உணவு தருகிறோம் என்று கூறி கடத்தல்காரர்கள் அவர்களை மரம் வெட்ட வைத்துள்ளனர்.

27 பேர் பலி
செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் முன்பு ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றைய சம்பவத்தில் பலியானவர்களையும் சேர்த்து செம்மரம் வெட்டியதற்காக இதுவரை 27 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2000 பேர் கைது
செம்மரம் கடத்தியதாகக் கூறி 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, மரத்தின் மதிப்பு பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது, ஒரு மரத்திற்கு ரூ.500 கூலி கொடுப்பார்கள். நாங்கள் வெட்டுவோம், அவ்வளவு தான் என்று தெரிவித்துள்ளனர்.

ரயில்
செம்மரக் கட்டைகளை ரயில்கள் மற்றும் பேருந்துகளில் எடுத்துச் செல்கையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு தாங்கள் எதை எடுத்துச் சென்றோம் என்றே தெியவில்லை. தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் சரக்கை ஒப்படைத்தால் அவர்களுக்கு ரூ.300 கூலி என்று மட்டும் பேசப்பட்டுள்ளது.

சீனர்கள்
செம்மரக் கட்டை கடத்தல்காரர்களை சீன மாபியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சீனர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை கடத்த பலரை பணியமர்த்தியுள்ளனர். சர்வதேச சந்தையில் செம்மரக் கட்டைகளுக்கு கிராக்கி அதிகம் என்பதை சீனர்கள் அறிந்துள்ளனர்.

தமிழக அரசு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுமுத்தல், சோனாபதி, அரங்கம், கூத்தமேடு, வாழவந்தான் ஆகிய வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை தான் செம்மரக் கடத்தல்காரர்கள் குறி வைத்தனர். அரசு அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் அளிக்காததால் கடத்தல்கார்கள் பணத்தாசை காட்டி அவர்களை எளிதில் தங்கள் வசப்படுத்திவிட்டனர்.

ஏஜெண்டுகள்
கூலிக்கு மரம் வெட்ட ஏஜெண்டுகள் மூலமாக தான் ஆட்களை எடுக்கிறார்கள். அந்த ஏஜெண்டுகளோ வாரத்திற்கு ரூ.80 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள். மரம் வெட்டுபவர்களை சுரண்டி வாழ்கிறார்கள். மரம் வெட்டும் இடங்களுக்கு ஏஜெண்டுகள் வர மாட்டார்கள். அதனால் போலீசாரிடமும் சிக்க மாட்டார்கள்.

ஆந்திர அரசு
செம்மரக் கடத்தல் விவகாரம் ஆந்திர அரசின் கையை மீறிச் சென்றுவிட்டது. குறிப்பிட்ட கண்காணிப்பு குழு வந்தால் அவர்களை தாக்குமாறு மரம் வெட்டுபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மரம் வெட்டுபவர்கள் கண்காணிப்பு குழுக்கள் வந்தால் கற்களை வீசுவார்கள் அல்லது சில நேரம் அரிவாளால் தாக்க முயல்வார்கள்.

நஷ்டஈடு
மரம் வெட்டுகையில் கைது செய்யப்படுபவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர ஏஜெண்டுகள் முயற்சி செய்வது இல்லை. அதனால் அவர்கள் சிறையில் வாடுகிறார்கள். மேலும் மரம் வெட்டுகையில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்படுபவர்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்குவது இல்லை. அவர்கள் குற்றம் செய்ததால் இழப்பீடு கிடையாது.

தமிழர்கள்
செம்மரம் வெட்டச் செல்லும் தமிழர்கள் பணம் இல்லாததால் தான் அந்த தொழிலுக்கு செல்கிறார்கள். அதனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்தால் அவர்கள் செம்மரம் வெட்ட செல்ல மாட்டார்கள்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications