சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? ஜெயக்குமார் அடடே
சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மே 14ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்துக்கான 4 டிஎம்சி தண்ணீர் விவகாரத்தில் மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

சீப்பை மறைத்து வைத்தால்
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தாமதம் பற்றி கருத்து தெரிவித்தார். அதாவது, சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தார்.

நம்பத் தயாராக இல்லை
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பத் தயாராக இல்லை என்றும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

உரிமையை விட்டுக்கொடுக்காது
காவிரி வழக்கில், உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை 100% உள்ளது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உரிமையை எந்த காலத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் கூறினார்.

புரிந்து கொள்ள வேண்டும்
மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசின் நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆணவம் இல்லாத அரசு
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தீர்க்க குழு
அரசுக்கு வரும் ரூ. 100 வருவாயில் ரூ. 70 அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது என்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications