ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு தயாரிப்பது எப்படி?- போலீஸாரை உறைய வைத்த கோவை ஆசாமி
ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டு தயாரிப்பது எப்படி என்று குறித்து வாக்குமூலம் கொடுத்த போலீஸாரையே உறைய வைத்தார் கோவை ஆசாமி ஒருவர்.
கோவை: கோவையில் இரண்டாயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு குடோன் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ' சுமார் ஒரு கோடி வரையில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் கோவை மாநகர போலீஸார்.
செயின் பறிப்பு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களைப் பிடிப்பதற்காக, புதிய யுக்தி ஒன்றை கோவை போலீஸார் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, ஒரு இடத்தில் பணிபுரியும் போலீஸார், வாகன சோதனைக்காக வேறு இடத்துக்கு மாற்றப்படுகின்றனர்.
வாகனத் தணிக்கை நிறைவடைந்ததும் அவர்கள் பழையபடி தங்கள் காவல்நிலையத்துக்கே சென்று விடுகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை 6.30 மணியளவில் தடாகம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார் ரேஸ்கோர்ஸ் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்.

பாக்கெட் சோதனை
அப்போது அந்த வழியாக டூ வீலரை ஓட்டிக் கொண்டு வந்த வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை சோதனையிட்டனர். அவருடைய செயல்பாடுகள் எல்லாம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கவே, அவரது பாக்கெட்டை சோதனையிட்டனர்.

சிறப்பான கவனிப்பு
அப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அகப்பட்டன. வழக்கமான நோட்டுக்களைவிடவும் இலேசான தடிமனில் இருந்த அந்த நோட்டுக்களைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்படவே, ஆனந்தை சிறப்பாகக் கவனித்தனர்.

பறிமுதல்
ஒருகட்டத்தில், 'நண்பர்களுடன் சேர்ந்து கள்ள நோட்டு தயாரித்து வருகிறேன். இதுவரை எங்கும் சிக்கியதில்லை' எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இன்று காலை வேலாண்டிபாளையத்தில் உள்ள ஆனந்தின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கான 2 ஆயிரம் கள்ள நோட்டுக்கள்(5904 நோட்டுக்கள்) பறிமுதல் செய்யப்பட்டன.

ஏமாற்றம்
சாக்கு மூட்டையில் கட்டப்பட்டவாறு ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்டு கலர் ஜெராக்ஸில் பிரிண்ட் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, கோவை மாநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாகக் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

நோட்டடிக்கும் மிஷின் பறிமுதல்
இதையடுத்து, ஆனந்த் மீது 449, 489 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனந்தின் கடையில் இருந்து பிரிண்ட்டர், இங்க் பாட்டில், ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications