ஒருவேளை சோத்துக்கு வழியில்லாத நாட்டுல 28% ஜிஎஸ்டி வரியா? - டி.ராஜேந்தர் 'பொளேர்': வீடியோ
இந்தியாவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத போது, 28 சதவீத ஜிஎஸ்டி வரியை மோடி விதித்தது நியாயமா என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஒருநேர சோற்றுக்கு வழியில்லாத நாட்டில் 28 சதவீத வரி விதிப்பது நியாயமா? இதற்காகவா மக்கள் உங்களை நம்பி ஓட்டுப் போட்டனர் என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமா டிக்கெட்டுக்கு 18-28 சதவீதம் வரை வரி விதித்துள்ளதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியதாவது: உலகில் எந்த நாட்டில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடான குவைத்தில் கூட 5 சதவீதம் தான் வரி. வல்லரசு நாடான அமெரிக்காவில் 7.5 சதவீத வரி. ரஷ்யாவில் மட்டும் தான் 18 சதவீத வரி.

ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இந்தியாவில் 28 சதவீதம் வரி என்பது எந்த விதத்தில் நியாயம்? நாடுநாடாக சுற்றித் திரியும் மோடி, மற்ற நாடுகளைப் பார்த்து இந்தியாவும் வளர்ந்துவிட்டது என்று நினைக்கிறாரா? 28 சதவீத வரி விதிக்கும் அளவுக்கு இங்கு என்ன வளர்ச்சி அடைந்துள்ளது?'' என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications