இழுத்து கடிக்கும் அளவுக்கு அவ்வளவு நீளமாகவா வயர் இருந்தது... மாஜிஸ்திரேட் சரமாரி கேள்வி #ramkumar
சென்னை: ராம்குமார் மின்சார வயரைக் கடித்து இறந்தார் என்று கூறப்படுவது குறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது புழல் சிறையில் நேரில் சென்று விசாரணை நடத்திய அவர் சரமாரியாக பல கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மிகவும் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத் தரப்பும், காவல்துறையும் கூறுகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் எந்த உயர் அதிகாரியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த புழல் சிறைக்குச் சென்று திருவள்ளூர் மாஜிஸ்திரேட் தமிழ் செல்வி விரிவான விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டு விசாரணை நடத்தினார்.
- நேற்று முற்பகல் 11.20 மணிக்கு புழல் சிறைக்கு மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி வந்தார்.
- சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், துணை கண்காணிப்பாளர் குமரேசன், ஜெயிலர் ஜெயராமன் ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
- சம்பவத்தின் போது பணியில் இருந்த சிறை காவலர் பேச்சிமுத்து, சிறை மருத்துவர் நவீன் ஆகியோரையும் அவர் விசாரித்தார்.
- ராம்குமாருடன் இருந்த சிறை கைதிகள் வெங்கடேசன், இளங்கோவன் ஆகியோரையும் அவர் நேரில் அழைத்து விசாரித்தார்.
- மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன் பணியாளர்கள், ராம்குமார் இருந்த பக்கத்து அறையிலுள்ள கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- அனைவரிடமும் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி தனித் தனியாக விசாரணை நடத்தினார்.
- ராம்குமார் எப்படி இறந்தார், சம்பவத்துக்கு முன் யாருடன் அவர் பேசினார் என்பது குறித்து நீதிபதி கேட்டறந்தார்.
- கடைசியாக ராம்குமாரை யார் பார்த்தது, ஒயரை கடித்த பிறகு ராம்குமாரை முதலில் பார்த்தது யார் என்றும் நீதிபதி விசாரித்தார்.
- ஒயரைக் கடிக்கும் அளவுக்கு ராம்குமாருக்கு எப்படி மின்சார பெட்டி எட்டியது என்பது குறித்தும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
- ஒயரை இழுத்து கடிக்கும் அளவுக்கு ஒயர் அவ்வளவு நீளமாக இருந்ததா என்றும் அவர் விசாரித்தார்.
- சிறை வளாகத்தில் ஏன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவில்லை என்ற கேள்வியையும் அவர் அதிகாரிகளிடம் முன்வைத்தார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications